ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்: தம்பிதுரை நம்பிக்கை.!

ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தினகரன் தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுக்குழுவை கூட்டி முறையாக துணைபொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்தோம். எனவே அவரது தலைமையில் கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஒன்றாகதான் உள்ளோம். அதிமுகவில் உட்கட்சி சண்டை எதுவும் இல்லை.

மேலும், இரட்டை இலை சின்னம் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.