இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்க அங்கீகாரம்!

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவு செய்யும் விசேட சட்டமூலத்தை வர்த்தமாணியில் வெளியிடுவதற்கும் மற்றும் அதனை பாராளுமன்றுக்கு கொண்டுவருவதற்கும் அமைச்சரவையில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம், இயற்றை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுள் சிலர் நிரந்தர முகவரிகளின்றி இடம்பெயர்ந்தவர்களாகவும் அகதிகளாகவும் தொடர்ந்தும் வசித்து வரும் ஒரு அவலநிலைமை நாட்டில் காணப்படுகின்றது.

எவ்வாறாயினும் இவர்களின் வாக்குரிமையையும் பாதுகாக்க வேண்டும். அதற்கிணங்க, இடம்பெயர்ந்தோர் தொடர்பில் விசேட உறுப்புரைகளை உள்ளடக்கி சட்ட வரைஞரினால் தயாரிக்கப்பட்ட வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் அதனை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைப்பதற்கும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அங்கீகாரம் கிடைத்துள்ளது.