தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
அவன்கார்ட் வழக்கு தொடர்பாக நேற்று கொழும்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்று விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்கள் இன்று சுதந்திரமாக இருக்கின்றனர். அவர்கள் பாராளுமன்றத்திலும் இருக்கின்றனர்.
போர்க்குற்ற விசாரணையை இவர்களுக்கு எதிராகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.