இலங்கை இதயத்தில் இடம்பிடித்த நாடு!

ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஜனவரி முதலாம் திகதி புதிய ஐ.நா பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் அன்ரனியோ குரெரெசை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முதல்முறையாகச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்ற ஐ.நா பொதுச்செயலர்,  மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு உதவ ஐ.நா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையராக பணியாற்றிய போது உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில், 1978ஆம் ஆண்டில் இருந்து தாம் பலமுறை இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டதாகவும், இலங்கை தமது இதயத்தில் இடம்பிடித்த நாடு என்றும் ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார்.