இந்திய அணிக்கு நல்ல நண்பர்களாக இருந்து ஆதரவு கொடுங்கள்: சேவாக் டுவிட்!

புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 441 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிச் சென்ற இந்தியா, போராட்டக் குணம் இல்லாமல் 107 ரன்னில் ஆல்அவுட்டாகி சரணடைந்தது.

இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ரசிகர்களும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணிக்கும், வீரர்களுக்கும் ரசிகர்கள் நண்பர்களாக இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனத டுவிட்டர் பக்கத்தில் ‘‘நல்ல நண்பர்கள் கடினமான நேரத்தைக்கூட எளிதாக மாற்றுவார்கள். இந்த தோல்வி ஏமாற்றம்தான். ஆனால், நீங்கள் நல்ல நண்பர்கள்தானே?. இந்த நேரத்தில் நல்ல நண்பர்கள், தொடர்ந்து அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.