ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் டொக்டர் சமன் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு அவர் இவ்வாறு ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக, கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் டொக்டர் சமன் வீரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த விஜயத்தின் சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழ்கின்றது எனவும், ஏனைய சிறுபோக உற்பத்திகளும் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் ஜனாதிபதியின் ரஷ்ய விஜயத்தின் ஊடாக உச்ச அளவில் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் முனைப்புக்கள் எடுக்கப்பட்டு வருவதாக தூதுவர் சமன் வீரசிங்க அவர் தெரிவித்தார்.