சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: தப்புவாரா எடப்பாடி பழனிச்சாமி?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மொத்தம் 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தாலும் மயிலாப்பூர் நட்ராஜ், கோவை வடக்கு அருண்குமார் ஆகியோர் ஆதரவு இல்லை என அறிவித்துவிட்டனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் பலம் 122 ஆக குறைந்துள்ளது.

மேலும் 10 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு?

ஓபிஎஸ்ஸை தொடர்பு கொண்டு 10 எம்.எல்.ஏக்கள் பேசியதாக தகவல்

10 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு போனால் எடப்பாடி அரசு கவிழும்

எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது

10 பேர் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தால் 112 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் கிடைக்கும்