ஐ.பி.எல். ஏலத்தில் 351 வீரர்கள்

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5-ந்தேதி முதல் மே 21-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 20-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது. ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க 799 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர்.

இதில் எந்தெந்த வீரர்களை ஏலத்துக்கு தகுதி உடையவர்கள் என்று ஆராயப்பட்டது. அதன்படி இறுதி ஏலப்பட்டியலில் 351 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் 122 சர்வதேச வீரர்கள் அடங்குவர். 24 இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். இஷாந்த் சர்மா, மார்சன், பென் ஸ்டோக்ஸ், வோக்ஸ், மேத்யூஸ், கும்மின்ஸ், மிட்செல் ஜான்சன் போன்ற வீரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

8 அணிகளும் சேர்ந்து மொத்தம் 79 வீரர்களை ஏலத்தில் எடுக்கிறார்கள். இதற்காக 351 வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள்.