போர்களத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ‘காஸி’ படம் பெருமை சேர்க்கும் : ராணா டகுபதி

ராணா டகுபதி – டாப்ஸி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காஸி’ படம் உலகம் முழுவதும் வருகிற பிப் 17-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை தெரிவித்தனர். அப்போது, நடிகர் ராணா டகுபதி கூறும்போது, என்னுடைய சிறுவயது காலங்களில் கேள்விபட்ட காஸி போர் தான் இப்படத்தின் கதை. ‘ப்ளூ ஃபிஸ்’ என்ற புத்தகத்தை எழுதிய இயக்குனர் சங்கல்ப் முதலில் இதை ஒரு குறும்படமாக இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்படம் முழுநீள திரைபடமாக தற்போது வெளிவந்துள்ளது.

இப்படமானது விசாகபட்டினத்தில் 71 நாட்கள் நடந்த யாரும் அறிந்திராத கடலுக்கடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. போர்களத்தில் நமக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இப்படம் பெருமை சேர்க்கும். ஒரு நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கடியில் வாழும் கடற்படை வீரர்களின் வாழ்க்கையையும், அவர்களின் ஒழுக்கத்தையும் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம்.

இப்படத்தின் இயக்குனர் சங்கல்ப் பேசுகையில், என்னுடைய முதல் படமே ஒரு சொல்லபடாத உண்மை சம்பவத்தை சொல்வதில் பெருமை கொள்கிறேன். இப்படத்தை நான் இயக்கியதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என கூறினார்.

இசையமைப்பாளார் கே பேசுகையில், இந்திய திரையுலக வரலாற்றில் இப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு முக்கிய திரைப்படம். முற்றிலும் புதிய களத்தை கொண்டது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனித்தன்மை கொண்ட இப்படம், என் சினிமா வாழ்க்கையில் என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் என கூறினார்.