சசியை ஆட்சி அமைக்க அழைத்தால்.. ஜெ சமாதியில் சாகும் வரை உண்ணாவிரதம்.. போலீஸ் ஏட்டு சபதம்!!

கடந்த 1999 முதல் 2002 வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் போயஸ் தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர் போலீஸ் ஏட்டு வேல்முருகன். இவர் தற்போது தேனி மாவட்டம் ஓடப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த போது அவர் குணமடைய வேண்டி சென்னை வடபழனி கோயிலில் வேல் குத்தி பிரார்த்தனை செய்தவர் இவர்.

இந்த நிலையில் தேனியில் பணியாற்றி வரும் இவர் செய்தியாளர்களை திடீரென சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அசாதரண அரசியல் சூழல் என்னை மிகவும் பாதித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரை சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.

ஒஒரு வேளை ஆளுநர் சசிகலாவை பதவி ஏற்க அழைத்தால் நான் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என கூறி உள்ளார்.