தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை ஆறுதல் வெற்றி பெறுமா?: நாளை கடைசி ஆட்டம்

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

இதேபோல் 5 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரையும் தென்னாப்பிரிக்கா கைப்பற்றி இருந்தது. அந்த அணி இதுவரை நடந்த 4 போட்டியிலும் வென்று 4-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் செஞ்சூரியன் மைதானத்தில் நாளை நடக்கிறது. தென்னாப்பிரிக்கா இந்த ஆட்டத்திலும் வென்று ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் உள்ளது.

இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.