வடக்கில் வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் உருவபொம்மை எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாணம் முழுவதும் தனியார் பேருந்து பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் மனிதநேயமற்ற செயலுக்கு எதிராகவும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதை கண்டிக்கும் வகையிலும் வடமாகாணத்தில் சகல தனியார் பேருந்துகளும் இன்று சேவையில் ஈடுபடவில்லை என இலங்கை தனியார் பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்று முல்லைத்தீவிலும் தனியார் பேருந்து சேவைகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் பொதுமக்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மேலதிக சேவையினை வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.