சர்வதேச விடுமுறை தினமாக மாறும் வெசாக் தினம்!

வெசாக் தினத்தை சர்வதேச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான பிரேரணை ஒன்றை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மேமாதம் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் தின வைபவத்தின் நிறைவு நிகழ்வு கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளவில் நடைபெறவுள்ளது.

இதன் போது இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தேரவாத பௌத்தத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில மேலும் சில பிரேரணைகள் ஐக்கிய நாடுகள் தேசிய வெசாக் தின வைபவத்திற்கு அமைவாக சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நீதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் தின வைபவ ஆரம்ப நிகழ்வு மேமாதம் 12 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதன் நிறைவு நிகழ்வு கண்டியில் மேமமாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.