மகிந்தவுக்கு சம்பந்தன் விடுக்கும் அழைப்பு!

பிரிவினைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கைவிட்டு தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மஹிந்த ராஜபக்ஷ எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கிழக்கில் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற நிகழ்வில் மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த அழைப்பை விடுத்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு தயாரிப்பு செயற்பாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பிரிக்க முடியாத ஐக்கிய நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பிரிவினைக்காக செயற்படாமல் எம்மோடு சேர்ந்து செயற்படுவது முக்கியமாகின்றது என தெரிவித்தார்.