அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை சந்தையில் கொள்வனவு செய்ய முடிவதில்லை என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சில பொருட்களுக்கு அரசாங்கம் உச்சபட்ச கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயம் செய்துள்ளது.
எனினும் இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த காலங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட உச்சபட்ச விலைகள் கூட சந்தையில் அமுல்படுத்தப்படாத நிலையில் மீளவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்து வர்த்தமானியில் அறிவிப்பது நகைப்பிற்குரியது என தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒரு கிலோ சீனி 100 முதல் 110 ரூபா வரையிலும், நெத்தலி ஒரு கிலோ 600 முதல் 800 ரூபா வரையிலும், மைசூர் பருப்பு 180 முதல் 190 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.
அரசாங்கத்தின் உச்சபட்ச கட்டுப்பாட்டு சில்லறை விலைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமேன நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே இந்தக் கோரிக்கையை ஊடகங்களின் ஊடாக அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.







