நுகேகொடையில் நடைபெற்ற கூட்டம் இனவாதத்தை மீள ஆரம்பிக்கும் வகையிலானது என கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினால் கடந்த 27ஆம் திகதி நுகேகொடையில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டமானது நாட்டில் மீளவும் இனவாதத்தை தூண்டும் வகையிலானது என ஆனந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒன்றிணைந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீளவும் பிளவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்த பிரதான நபராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திகழ்கின்றார் என ஆனந்த அலுத்கமகே நேற்று கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.