மைலாப்பூரில் போலீஸ் வாகனங்கள் தீக்கிரை.. போலீஸ் செக் போஸ்ட் நொறுக்கப்பட்டது!

சென்னை மயிலாப்பூர் டி.வி.கோயில் தெருவில் வன்முறையாளர்களால் பல போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

மெரினாவில், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்ததை கண்டித்து சென்னையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலையில் திருவல்லிக்கேணி பகுதியில் ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையம் மர்ம நபர்களால், தீக்கிரையாக்கப்பட்டது

 

இந்நிலையில் மதியம், மயிலாப்பூர் டி.வி.கோயில் தெருவில் போலீஸ் வாகனங்கள் மற்றும் போலீஸ் பூத்தும் அடித்து நொறுக்கப்பட்டது. போலீசாரின் கார், வேன் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக விரோத கும்பல் இதுபோன்ற தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு, மாணவர்கள் மீது பழிபோட முயல்வதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் தாக்குதல் நடத்துவோரின் முகம் மற்றும் உருவ அமைப்பை பார்க்கும்போது அவர்கள் மாணவர்களாக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.