இது திருமணமான பெண்களுக்கு மட்டும்!

பெண்கள் கருத்தரிக்க முடியாமல் அதிகப்படியான மன உளைச்சலை அடைவதற்கு, அவர்களின் ஆரோக்கியமற்ற கருவளம் தான் காரணம்.

பெண்கள் கருவளத்தின் ஆரோக்கியமின்மைக்கு அவர்கள் அன்றாடம் சாப்பிடும் கெமிக்கல் மற்றும் பூச்சிக் கொல்லிகள் நிறைந்த உணவுப் பொருட்களே காரணமாகும்.

எனவே கருவளத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் மற்றும் ஜூஸ்களை பெண்கள் தினமும் குடித்து வந்தால், கருவளம் மேம்படுவதுடன், கருவுறும் வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்கிறது.

தேவையான பொருட்கள்
  • பசலைக் கீரை – 1 கப்
  • புரோட்டீன் பவுடர் – தேவைபட்டால்
  • இளநீர் – 1 டம்ளர்
  • ஆளி விதைகள் – 1 கைப்பிடி
  • பெர்ரி பழங்கள் – 1 கைப்பிடி
செய்முறை

பசலை கீரை, புரோட்டீன் பவுடர், இளநீர், ஆளி விதைகள் மற்றும் பெர்ரி வகைகளில் உள்ள அனைத்து பழங்களையும் 1 கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளலாம்.

இந்த அனைத்து பொருட்களையும் தேவையான அளவு நீர் ஊற்றி, நன்றாக அரைத்தால், ஆரோக்கியமான சுவையான பானம் தயார்.

குறிப்பு

இந்த பானத்தைக் குடித்த பின், 5 நிமிடம் கழித்து ஒரு கப் எலுமிச்சை ஜூஸைக் குடிக்க வேண்டும்.

மேலும் பெண்கள் இதே போல் வாரம் ஒருமுறை குடித்து வந்தால், கருவளம் மேம்பட்டு, விரைவில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.