பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் புல்லட் ஓட்டும் ஜோதிகா!

`குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா அடுத்ததாக ஜோதிகாவை வைத்து `மகளிர் மட்டும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயிண்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்ட ஜோதிகா, `36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். அதனைத்தொடர்ந்து தற்போது, `மகளிர் மட்டும்’ படத்தில் நடித்து வருகிறார். பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் பெண்ணுரிமை பற்றி பேசும் ஜோதிகா, இந்த படத்தில் புல்லட் ஓட்டும் பெண்ணாக நடித்துள்ளார்.

படம் முழுவதும் புல்லட்டில் வலம் வரும் ஜோதிகா, இதற்காக ஒருவாரம் சூர்யாவிடம் புல்லட் ஓட்ட பழகியுள்ளார். இதன்பின்னரே  இப்படத்தில் ஜோதிகா நடிக்கத் தொடங்கியுள்ளார். இதனிடையே, இப்படத்தில் ஜோதிகா புல்லட் ஓட்டிக்கொண்டு வரும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

முன்னதாக நாசர், நடிகை ரேவதி, ஊர்வசி நடிப்பில் `மகளிர் மட்டும்’ படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.