இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி நாளை தேர்வு!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 0-4 என்ற கணக்கில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. அதன் பிறகு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சொந்த நாடு திரும்பிய இங்கிலாந்து அணி வருகிற 15-ந் தேதி முதல் மீண்டும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி தேர்வு மும்பையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள்.