எந்த முறையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்நோக்கத் தயார்! திகாம்பரம்

எந்த முறையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்நோக்கத் தயார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் நாட்களில் நடத்தப்படும் எந்தவொரு முறையிலும் தேர்தல்களை எதிர்நோக்க தொழிலாளர் தேசிய சங்கம் தயார்.

எமது கட்சி அநேகமாக ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து பயணித்து வருகின்றது.

எதிர்வரும் தேர்தல் ஒன்றின் போது யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி தீர்மானிக்கவில்லை.

நாம் எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கத் தயார். அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுவதாக சிலர் கூறுகின்றார்கள்.

எனினும் எல்லை நிர்ணயத்தை உரிய முறையில் மேற்கொண்டு தேர்தல் நடத்தினால் நாம் தேர்தல் குறித்து அஞ்சப் போவதில்லை.

தேசிய அரசாங்கம் என்ற போதிலும் சில அமைச்சர்கள் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

பிரதமர் ரணில், ஜனாதிபதி மைத்திரியினால் பிரதமரானார் என அமைச்சர் டிலான் கூறுகின்றார் .

எனினும், ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னைய வரலாற்றை டிலான் மறந்து விட்டு பேசுகின்றார் என பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.