இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?

நம்முடைய ஆழ்மனதானது சில வெளிப்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்களின் பேரில் நம்முடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதே கனவு ஆகும்.

இதனை நாம் சரியான வழியில் புரிந்துகொண்டால் வாழ்க்கைக்கு தேவையான பல நுண்ணறிவுகளை பெறலாம்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் காரணங்களும் சொல்லப்படுகின்றன.

அதாவது, அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஏதும் குறைகள் இருந்தால், அவர்களை பற்றி எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் கனவில் வருவது போன்று தோன்றலாம்.

அவர்களது இறப்பு உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தி இருந்தாலும் கனவு வரும்.

ஆன்மீக ரீதியாக சொல்லப்போனால், இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும், உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம், வஸ்திர தானம் செய்யலாம்.

வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.