குஜராத் மாநிலம் மேசானா பகுதியில் நடந்த காங்கிரஸ் பொது கூட்டத்தில் அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது..
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருந்த போது சகாரா மற்றும் பிர்லா குழும நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியிருக்கிறார். இது குறித்த விசாரணை துவங்கப்பட வேண்டும்.
வருமான வரித்துறையினரின் அறிக்கைகளில் சகாரா குழும அதிகாரிகளின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. இதன் காரணமாக சகாரா அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு அக்டோபர், 2013 முதல் பிப்ரவரி 2014 வரை கிட்டதட்ட 9 முறை பணம் வழங்கி இருக்கின்றனர்.
இது குறித்த அறிக்கைகள் வருமான வரித்துறை வைத்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் குஜராத் மாநிலத்திற்கு நரேந்திர மோடி முதல்வர் பதவி வகித்து வந்தார். பிர்லா குழுமம் சார்பில் நரேந்திர மோடிக்கு 12 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணை இன்றளவும் மேற்கொள்ளப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரம் குறித்த விசாரனை விரைவில் துவங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததோடு, இந்த குற்றச்சாட்டுகள் அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஊழல் விசாரணையை திசை திருப்பும் வகையில் இருக்கிறது என தெரிவித்தார்.