டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்தோடு 2016-ஐ முடித்தது இந்தியா!

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் இன்றுடன் முடிவடைந்தது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா 115 புள்ளிகளுடன் ஐ.சி.சி. தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 4-0 என கைப்பற்றியதால் 5 புள்ளிகள் பெற்று 120 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.

இங்கிலாந்து இத்தொடருக்கு முன் 105 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. தற்போது இந்த தோல்வியால் 101 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலியா 105 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 102 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது.

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் ஐ.சி.சி. தவரிசையில் மாற்றம் வர வாய்ப்பில்லை.

இதனால் இந்தியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தோடு 2016-ம் ஆண்டை வெற்றிகரமாக முடித்துள்ளது.