நாட்டில் அண்மையில் தொலைத்தொடர்பாடல் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பாடல் துறை இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 21 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைக்கு,கையடக்க தொலைபேசி பாவனையாளர்களின் அதிகரிப்பே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கையடக்க தொலைபேசி வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 24 மில்லியனுக்கும் அதிகம் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 5.6 சதவீதம் தொலைத்தொடர்பாடல் துறை வளர்ச்சியடைந்துள்ளது.
குறிப்பிட்ட காலத்தில் நிலையான இணைப்புகளின் எண்ணிக்கை 3 மில்லியன் வரை அதிகரித்துள்ளது.
இணையத்தளம் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றின் பயன்பாடு 11.4 சதவீதமாக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.