தங்கம் சேர்க்க விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!

செவ்வாய்க்கிழமை அவிட்டம் நட்சத்திரத்தில், காலை எழுந்தவுடன் யாருடனும் பேசாமல் ஒரு பித்தளைக் குடத்தில் துவரம் பருப்பு, அரிசி, கொண்டைக்கடலை இவை மூன்றையும் சம அளவில் கலந்து நிரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை கவிழ்த்து வைத்து, குடும்பத்தாருடன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று, சுவாமியின் முன் குடத்தை வைத்து, அபிஷேக ஆராதனைகள் முடித்து, அர்ச்சகரிடம், தோஷம் நீங்க செவ்வாய் கிரக பூஜைத்தானம் என்று சொல்லி கொடுக்க வேண்டும்.

பிறகு அர்ச்சகரிடம் குடத்தை கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து விட வேண்டும். பிறகு சிறிது கொண்டைக்கடலையை அவித்து தானம் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தால் வீட்டில் தங்கம் நிலையாகத் தங்கும்.

இதனை செவ்வாய்க்கிழமைகளில் வரும் அவிட்டம் நட்சத்திரத்தன்று தொடர்ந்து செய்து வர வேண்டும்.