ஜனாதிபதி ஆணைக்குழு, 171 முறைப்பாடுகளை விசாரித்து முடித்துள்ளது!

ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தமக்கு கிடைத்த முறைப்பாடுகளில் 171 முறைப்பாடுகளுக்கான விசாரணைகளை நிறைவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆறு அறிக்கைகள், அடுத்த கிழமைகளில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன. மேலும் மூன்று அறிக்கைகள் விரைவில் இறுதிப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர, மேலும் 9 அறிக்கைகளை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு 357 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.