மஹிந்தவுக்கு கௌரவம் கொடுத்த நல்லாட்சி அரசு!

ஹம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகத்தை அரசாங்கம் – தனியார் நிறுவனமாக நடத்தி செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக நிகழ்வு தற்போது அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் ஜனவரி மாதம் 7ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புதிய நிர்வாகத்தின் கீழ் கொள்கலன்கள் ஏற்றி இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.