ஜெயலலிதாவுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும்: பிரதமரிடம் ஓ.பன்னீர்செல்வம் நாளை கடிதம்!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (19-ந்தேதி) பிரதமரை டெல்லியில் சந்திக்கிறார்.

அப்போது தமிழ்நாட்டில் ‘‘வார்தா’’ புயலினால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்கவும் மற்றும் தமிழ்நாடு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் அளிக்க உள்ளார்.

மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘‘பாரத ரத்னா’’ விருது அளிக்க வேண்டியும், முழு திருவுருவ வெண்கலச் சிலையினை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கவும் கடிதங்களை அளிக்க உள்ளார். முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளையே சென்னை திரும்புகிறார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.