இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பில் ஆர்வம்!!

இலங்கையின் நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று ஞாயிறுக்கிழமை காலை 7.00 முதல் மாலை 4 .00  வரை, நாடெங்கிலுமுள்ள 661 தேர்தல் மத்திய நிலையங்களில்  நடைபெறுகின்றது.
தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும்,தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் நடைபெறுகின்ற குறித்த தேர்தலில் இம்முறை  916 இளைஞர், யுவதிகள் போட்டியிடுகின்றனர், இதில் 160 வேட்பாளர்கள்  இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய்ப்படவுள்ளார்கள்.
அந்த வகையில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.இதன்படி  வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் இளைஞர்கள் வாக்களிப்பில்  மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 711 வாக்காளர்களை கொண்ட குறித்த தொகு தியில்  சங்கானை  பிரதேச செயலம், சங்கானை சமுர்த்தி அலுவலகம் ஆகிய இரண்டு வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கினறன.
சங்கானை சமுர்த்தி அலுவலகத்தில் வாக்களிக்க கூடிய இளைஞர் கழகங்களாக கற்பகச்சோலை,அம்பாள் ,மூளாய் வளர்சோலை, சுழிபுரம் மேற்கு,தாயகம்,சுழிபுரம் மத்தி,சுழிபுரம் கிழக்கு,  பண்ணாகம்,மறுமலர்ச்சி ஆகிய இளைஞர் கழகங்களும்,
சங்கானை    பிரதேச செயலகத்தில் வாக்களிக்கக் கூடிய இளைஞர் கழகங்களாக  கலைநகர், சென் நியூ ஸ்டார் ,நிலாவொளி, ஜேம்ஸ்,  உதயசூரியன், அராலி ஐயனார்,ஞானமுருகன்,பாரதி,சில்வஸ்டார்,வட்டு இந்து வாலிபர்,வட்டுகோட்டை,நீகரை போய்ஸ் ஸ்டார்,ஞானவைரவர் ,விநாயகர்,சங்கானை,சங்கானை,கண்ணன்தெற்கு,ஆகிய இளைஞர் கழகங்களும் தகுதி பெற்றுள்ளன.
இதேவேளை கிளிநொச்சி,முல்லைத்தீவு , வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் தேர்தல் விறுவிறுப்பாக இடம்பெறுவதோடு இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.                                                                                   .