விண்கற்கள் பொழிவினை பார்க்க இலங்கைர்களுக்கு ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி இரவு மற்றும் 22ஆம் திகதி அதிகாலை வேலையில் வானத்தை அவதானிதால் விண்கற்களை காண முடியும் என வானியியல் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க நாசா நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அர்பீட் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த விண்கற்கள் பொழிவு மணித்தியாலத்திற்கு 5 முதல் 10க்கு இடைப்பட்ட அளவில் பூமியை நோக்கி விடும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கற்கள் பொழிவு வருடாந்தம் நிகழ்கின்ற ஒன்றாகும். அது டிசம்பர் மாதம் 17 மற்றும் 25ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலங்களில் இதற்கு முன்னர் காண முடிந்தன.







