ஈஃபிள் கோபுரத்திற்கு இப்படியொரு நிலையா…! கவலையில் சுற்றுலா பயணிகள்

ஈஃபிள் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்று, பிரான்ஸ் நாட்டின் அடையாளம் என இதனை சொல்லிக்கொண்டே போகலாம்.

உலக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள இந்த இடம் கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளமையினால், சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஈஃபிள் கோபுரத்தில் பணிப்புரியும ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செவ்வாய்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் SETE அமைப்பு இன்றைய தினம் பேச்சுவார்தையில் ஈடுபடவுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது பாடசாலை விடுமுறை காலம் என்பதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் பேர்வரை ஈஃபிள் கோபுரத்தை பார்வையிட வருவார்கள் எனவும், விரைவில் ஈஃபிள் கோபுரம் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.