வீதி ஒழுங்கை மீறியவர் தமது நண்பியில்லை : நாமல்

தமது நண்பி வீதி ஒழுங்கை மீறவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹலோகோப் நிறுவனத்துக்கு சொத்துக்கள் வந்த விதம் குறித்து விளக்கமளிப்பதற்காக நாமல் இன்று பொலிஸ் நிதிமோசடி எதிர் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.

விசாரணையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அவர், சிறிய வீதி ஒழுங்கு பிரச்சினைகளை கூட அரசாங்கம் தற்போது பெரிய விடயமாக்கி வருகிறது.

அண்மையில் தமது நண்பி வீதி போக்குவரத்து ஒழுங்குகளை மீறினார் என்ற குற்றச்சாட்டை மறுத்த நாமல் ராஜபக்ச, குறித்த யுவதி எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் மகள் என்றும் தமது நண்பி இல்லை என்றும் தெரிவித்தார்.