கால்களை இழந்து என்னால் தலைநிமிர் தலைவியாக உயிர்வாழ முடியாது. என்னை கருணைகொலை செய்துவிடு சசி.. என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதறியதாக ஒரு தகவல் தற்போது தமிழகம் முழுவதும் பரவி வருகின்றது.
இது மேலும் ஜெயலலிதாவின்,மறைவிற்கான மர்மங்களை அதிகப்படுத்தியிருக்கின்றது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகமானதால் ஒரு கால் எடுக்கப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் இன்னொரு காலையும் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கால்களை இழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா சசிகலாவிடம், கால்கள் இல்லாத எனது வாழ்க்கை நரகம். வேண்டாம். எனக்கென்று ஒரு இமேஜை வளர்த்துவிட்டேன். அதனால், என்னை கருணை கொலை செய்துவிடு என்று கூறியதாக தகவல்கள் கசிகின்றன.
இந்த தகவல்கள் உண்மையோ பொய்யோ தெரியாது எனினும், இவைகளை ஆராய்ந்து பார்க்கும்போது, தன்னம்பிக்கையின் மறு வடிவம் தான் ஜெயலலிதா. ஆற்றல் மிக்கவர். அவருக்கென்று தனித்தன்மையை வளர்த்துக்கொண்டவர். கால்களை இழந்ததால் அவர் மனதளவில் பெரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கலாம்.
அந்த பாதிப்பே மனதளவில் அவருக்கான தன்னம்பிக்கையை இழக்கச்செய்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.
தன்னம்பிக்கையற்ற நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் போயிருக்கலாம். அந்த தன்னம்பிக்கையற்ற நிலைதான் அவரது உயிரை பறித்துவிட்டதோ..? என்று எண்ணத்தோன்றுகிறது.
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஸ்டாலின் போன்றவர்களும் கூட முதல்வரின் மறைவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரியுள்ளனர்.
இந்த தலைவர்கள் எல்லாம் தமிழக மக்களின் எண்ணங்களைத்தான் பிரதிபலிக்கிறார்கள். மீண்டும் ஒரு புயல் கிளம்பியுள்ள ஜெயலலிதா மறைவிற்கான மர்மரங்களை விடுவிக்க சசிகலா தரப்பினரோ அல்லது அப்போலோ மருத்துவமனையோ மருத்துவ அறிக்கையினை வெளியிட்டு, இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.