தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு கணக்கு மட்டுமல்ல மொழியறிவும் கிடையாதென தெரிவிக்கப்படுகின்றது.
என அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
விற்பனை மற்றும் குத்தகை என்ற இரண்டு வார்த்தைகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் கூட விமல் வீரவன்சவினால் புரிந்து கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச அரசாங்கங்களினால் மக்கள் மீது சுமத்திய அதீத கடன் சுமைகளை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.