முல்லைத்தீவில் கரையொதுங்கும் கடல்பாம்புகள்

முல்லைத்தீவு கடற்கரையில் இறந்த நிலையில் கடல்பாம்புகள் கரை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்தா புயலின் தாக்கத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்பாம்புகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

எனினும் இவ்வாறு ஆழ்கடல் உயிரினங்களின் இறப்புகளின் காரணமாக கரையோர மக்களை அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.