தெஹிவளை ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் – வீடியோ

ஆரம்ப காலம் முதல் மனித சமூகம் இறைவழிபாட்டை தலையாய கடமையாக கடைபிடித்து வருகின்றனர். அதன் வழியில் வந்த இன்றைய சந்ததியினரும் அதனை கடைபிடித்து வருகின்றனர்.

வாழ்கையை நெறிப்படுத்தும் வகையிலான சிறந்த வழிகாட்டல்களையும் , சிறந்த பயணத்தையும் கொண்டமைந்த இந்து மதத்தில் பல வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன.

ஆகம மற்றும் கிராமிய முறையிலான வழிபாட்டுமுறைகள் இவ்வாறு பின்பற்றப்பட்டு வருகின்றது. எனினும், நாகரிகம் என்னும் பெயரில் உலகமே ஒரு மாறுபட்ட கோணத்தில் சென்றுகொண்டிருக்க, மத கொள்கைகள் மதிப்பற்றதாக பரிணமித்துவிட்டது .

இன்று நவீனம், கணினிமயமாக்கம் என ஓடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் சடங்குகள், மாந்திரீகம், பரிகாரம் என்னும் நிலைப்பாட்டில் ஒரு தரப்பினர் இருக்கத்தான் செய்கின்றனர்.

இவ்வாறான மதச் சடங்குகள், பரிகாரம் போன்ற நிகழ்வுகள் கொழும்பு தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.