யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை! ஐந்து பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றில்! விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்றைய தினம் நீதிமன்றில்முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில்முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்த வழக்கு இறுதியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,கொலை தொடர்பிலானசாட்சியங்களை இன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கமாறு நீதவான்உத்தரவிட்டிருந்தார்.

குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போதுமோட்டார் வாகனம் பாதையை விட்டு விலகியமை காரணமாகவே மாணவர்கள் உயிரிழந்தார்கள்என முன்னதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்னர்,மரணமடைந்த மாணவர்களின் பிரேத பரிசோதனைகளின் படி, சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

எனவே கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளினதும் பணி இடை நீக்கம்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த படுகொலை சம்பவம் யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் கடந்த மாதம்20ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்கிறது விளக்கமறியல்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளை மேலும் இந்த மாதம் 16ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதேயாழ்.நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறிழத்த மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என மாணவர்களின் பிரேதபரிசோதனைகளின் படி, தெரியவந்தது.

எனவே கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளினதும் பணி இடை நீக்கம்செய்யப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த படுகொலை சம்பவம் யாழ். கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் கடந்த மாதம் 20ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.