யாழில் இன்னும் ஒரு ஆச்சரியம்…

பலருக்கு சிரிப்பாக இருக்கும். முக்கியமாக பனிக் குளிர் நிலவும் மேலை நாட்டு நண்பர்களுக்கு.

குளிர்! குளிர்!! குளிர்!!! தாங்க முடியாத குளிர் யாழ்ப்பாணத்தில்.

எனது இந்த 68 வயதில் இப்படி ஒரு குளிரை யாழ்ப்பாணத்தில் நான் அனுபவித்ததே இல்லை.

அதுவும் எனது வீட்டின் பின் விறாந்தை யில் நின்று சுழன்றடிக்கும் காற்று வீசும் போது மயிர்த்துளையை ஊடறுத்து வரும் குளிர் தாங்க முடியாத தாக இருக்கிறது.

வயதானால் தான் இப்படி என நினைத்தால் இன்று வந்த இளந்தாரி medical rep ஓருவரும் அதையேதான் சொன்னார். திருகோணமலையிலும் குளிர்.

இவ்வாறான காலநிலையால் மக்கள் ஆச்சரியப்படுவதுடன் இவ்வாறான காலநிலை முதல் முறை எனக் கூறப்படுகிறது…