“நாடா” புயல்காற்று எனக் கூறப்படும் புயல் காற்று ஒன்று இன்று வடக்கை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை திடீரென்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று (01) காலை காலை எட்டு முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்பட வில்லை என கூறப்படுகின்றது.

தரம் ஆறு தொடக்கம் உயர் தரம் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகின்ற இப்பாடசாலையில் கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்ப்பட்ட பிரதேச மாணவர்களை அதிகமாகக் கல்விகற்று வருகின்றனர்.

மேலும், இந்த சீரற்ற காலநிலை தொடருமாக இருந்தால் ஆபத்து அதிகரிக்கும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.nadaaa-300x246