கண்டிக்கு “க” க்கு பதிலாக ‘கு’ போட்டு எழுதும் பேரூந்துகள்..!!

தமிழிலும் எழுதவேண்டும் என்பதற்காக சில இடங்களில் எழுதுகின்றனர். சிங்களத்தில் பெரிதாக எழுதுகின்றனர். எழுதவேண்டும் என்பதற்காக தமிழ் மொழியில் சின்னதாக எழுதுகின்றனர்.

தற்போது நாடாளுமன்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கும் எனது கட்சியைச் சேர்ந்தவர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

எனினும், ‘க’ என்ற எழுத்துக்கு பதிலாக ‘கு’ போட்டு எழுதுகின்றனர். அதன் அர்த்தத்தை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.