நாளை தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது?

நாளை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரால் நடத்தப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக இன்றைய தினம் தீர்மானிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கெமுனுவிஜேரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு எதிராக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு எதிராக அஞ்சன பிரிஜன்ஜித் தலைமையிலான பஸ் சங்கம் நாளைய தினம் வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.