2 ஆம் திகதி திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம்!

திட்டமிட்டப்படி நாளை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபடுவோம் என ரயில்வே தொழிற்சங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

நேற்று கொழும்பில் நடத்தபட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த ஒன்றியத்தின் செயலாளர் ஜனக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாளை நள்ளிரவு 12மணிக்கு பின்னர் (2ஆம் திகதி அதிகாலை) ரயில் சேவைகள் இடம்பெறாது என அவர் தெரிவித்துள்ளார்.