மது மயக்கத்தில் ஆசிரியர்கள்: கோபத்தின் உச்சத்தில் மாணவர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு ஆசிரியர்கள் பாடம் எடுப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருதங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு அரசு உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்து பாடம் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தலைமையாசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், தமிழ் ஆசிரியர் சுரேந்திரன் என்பவர் பள்ளி மாணவிகளிடம் மிகவும் ஆபாசமான வார்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற தொடர் சம்பவங்களால் கோபம் கொண்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் குழித்துறை கல்வி மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் மற்றும் மது அருந்தி விட்டு பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.