கதிர்காமம் புனித பூமியில் 10 சிறுமிகள் கைது!

கதிர்காமம் புனித பூமியில் யாசகத்தில் ஈடுபட்ட 23 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்டவர்களில் 10 சிறுமிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் புனித பூமியை அண்மித்த பகுதியில் சிறுவர்களை ஈடுபடுத்தி பொதுமக்களிடம் இருந்து பணம் சேகரிக்கும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்படுவதாக மதத் தலைவர்கள் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர்.

இதற்காக 75 க்கும் அதிகமான சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய நேற்றையதினம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.