யாழ்ப்பாணம் சாட்டி துயிலுமில்லத்தில் நினைகூரல்

நாடு முழுவதும் உள்ள துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கான நினைவுகூரல் நடைப்பெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் சாட்டியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவு கூறலானது இன்று(27) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.cha11