பிரபாகரனை வாழ்த்தி சுவரொட்டிகள்!

கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்களும் தேசிய தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி தமது உயிர் நீத்த மாவீரர்களது வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி கனகபுரம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களில் இடம்பெறவுள்ள நிலையிலேயே இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகளும் வீதியோரங்களில் காணப்படுகின்றது.

p88

p77