ஆடம்பர வீட்டை ரூ.181 கோடிக்கு விற்பனை செய்யும் பிரபல நடிகர்: காரணம் என்ன?

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப் தனது மனைவியை விவாகரத்து செய்தததை தொடர்ந்து அவரது ஆடம்பர வீட்டை ரூ.181 கோடிக்கு விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ வரிசை படங்களில் உலகை கலக்கிய ஹாலிவுட் நடிகரான ஜானி டெப் தனது மனைவியான ஆம்பர் ஹெர்ட் என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் விவாகரத்து செய்தார்.

திருமணம் ஆன நாள் முதல் தன்னை அடித்து துன்புறித்து கொடுமைப்படுவதாகவும், தகாத வார்த்தைகளால் பேசி வேதனையை ஏற்படுத்துவதால் ஜானி டெப்புடன் மனைவி விவாகரத்து கோரியுள்ளார்.

ஆனால், முன்னாள் மனைவியின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஜானி டெப் மறுத்துள்ளார்.

மனைவியை விவாகரத்து செய்த பிறகு அவருக்கு ஜீவனாம்சமாக 7 மில்லியன் பவுண்ட்(129,74,85,875 இலங்கை ரூபாய்) அளிப்பதற்கு டெப் சம்மதித்துள்ளார்.

எனினும், இத்தொகையை தான் பயன்படுத்த போவதில்லை என்றும், இத்தொகை முழுவதையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க பயன்படுத்துவேன் என ஆம்பர் ஹெர்ட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது ஆடம்பரமான வீட்டை 9.8 மில்லியன் பவுண்ட்(181,64,80,225 இலங்கை ரூபாய்) விலைக்கு விற்பனை செய்யவுள்ளதாக ஜானி டெப் அறிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகரான பிராட் பிட் தனது மனையான ஏஞ்சலினா ஜோலியை விவாகரத்து செய்த பிறகு பிரான்ஸில் உள்ள தனது சொந்த வீட்டை பிராட் பிட் விற்பனைக்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.