ஆண்மையை பறித்து விட்டால் பெண்ணை தொடும் தைரியம் வராது: மீரா ஜாஸ்மின் ஆவேசம்

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ‘பத்து கல்பனாக்கள்’ என்ற மலையாள படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்து உள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக இருப்பதையொட்டி கேரள மாநிலம், கொச்சி நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த மீரா ஜாஸ்மின், மேற்கண்டவாறு கூறினார்.

கற்பழிப்பு குற்றங்களை தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாலியல்ரீதியாக பெண்களை தாக்குபவர்களுக்கு வலிமிகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும். இதைப்போன்ற நபர்களுக்கு ஆண்மைத்தன்மையை நீக்குவது ஒன்றுதான் சரியான வழியாக இருக்க முடியும்.

அப்படி தண்டிக்கப்பட்ட பின்னர், தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருபெண்ணை தொடுவதற்கான தைரியம் அவர்களுக்கு வராது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பேட்டியின்போது அவருடன் நடிகர் அனூப் மேனன், பெரும்பாவூர் என்ற இடத்தில் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் ஆகியோர் உடனிருந்தனர்.