இலங்கை அரச பணியாளர்களுக்கு புதிய முறையில் பதவி உயர்வு!

எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக  பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இதற்காக புதிய நடைமுறை ஒன்றை ஆரம்பிப்பதாக  இதன் போது தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் காணப்பட்ட சேவைக் காலத்தின் அடிப்படையில் பதவி உயர்வி வழங்கும் நடைமுறையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.

அரச சேவையை நவீனமயப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக இந்நடவடிக்கையை முன்னெடுப்பதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார கூறினார்.